THUPPAKKI – OFFICIAL THEATRICAL 2MINTRAILER HD



தனுஷுக்கு ஜோடியா? குழப்பத்தில் ஹன்சிகா

தனுஷுக்கு ஜோடியாக நடிப்பது குறித்து யோசித்து வருகிறேன் என்கிறார் ஹன்சிகா.
மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகா, தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது சிங்கம் 2, சேட்டை மற்றும் தெலுங்கு படம் என 6 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் நடிக்கும் சொட்டவாளகுட்டி என்ற படத்தில் மீண்டும் அவருக்கு ஜோடியாக நடிக்க பேச்சு நடக்கிறது.
இப்படத்தை களவாணி பட இயக்குனர் சற்குணம் இயக்குகிறார். இது பற்றி ஹன்சிகா கூறுகையில், சேட்டை படத்திற்காக தற்போது சுவிட்சர்லாந்து சென்றிருக்கிறேன். தமிழில் சில கதைகளை கேட்டிருக்கிறேன்.
அதில் தனுஷ் நடிக்கும் படமும் ஒன்று. 2 புதிய படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். அது என்னென்ன படம் என்பதை இப்போது சொல்ல முடியாது.
தனுஷ் படத்தில் நடிப்பது பற்றி யோசித்து வருகிறேன். வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்தபிறகு அதுபற்றி முடிவு செய்வேன்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகே புதிய படம் பற்றி சொல்ல முடியும். 2 கதைகள் என் மனதை கவர்ந்திருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

நடுரோட்டில் திட்டு வாங்கிய ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயாவின் கார் நடுரோட்டில் பஞ்சாராகி நிற்க, பின் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்களிடம் திட்டு வாங்கி திரும்பியிருக்கிறார்.
ஸ்ரேயா இளவரசி வேடத்தில் நடிக்கும் சந்திரா திரைப்படம் மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தற்சமயம் ஸ்ரேயா மும்பையிலேயே தங்கியுள்ளார்.
இந்நிலையில் தனது தோழிகளை அழைத்து வருவதற்காக நடிகை ஸ்ரேயா விமானநிலையம் சென்று திரும்பியிருக்கிறார்.
வரும் வழியில் ஸ்ரேயாவின் கார் பஞ்சரானது. இதனால் அவர் காரின் முன் பின் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பொதுமக்களில் சிலர் ஆட்டோகிராப் வாங்கினர். மற்றவர்கள் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான ஸ்ரேயாவை திட்டி தீர்த்தனர்.
இதனால் ஸ்ரேயா, தனது தந்தைக்கு போன் செய்தார். அவர் பொலிஸார் மூலம் ஸ்ரேயாவை மீட்டனர்.
தன் வாழ்க்கையில் நடந்த மிக மோசமான சம்பவம் என ஸ்ரேயா தெரிவித்தார்.

பர்ஃபி ரீமேக்கில் சிம்பு?

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டாகி ஒஸ்கருக்கு செல்லும் பர்ஃபி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் ரன்பீன் கபூர், ப்ரியாங்கா சோப்ரா, இலியானா நடித்த பர்ஃபி திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
காது மற்றும் பேசு திறன் இல்லாத ஒரு நபரின் காதலை மையப்படுத்தி இக்கதை பின்னப்பட்டிருக்கும்.
இந்தியா முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடிப்பார் என தெரிகின்றது.
இது குறித்து சிம்பு, மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் பர்ஃபி படத்தை இரு முறை பார்த்தேன்.
இதன் தமிழ் ரீமேக்கில் நான் நடிப்பது குறித்து இப்போது சொல்வதற்கில்லை என்றார்.
ஏற்கனவே பிறமொழியில் இருந்து பல படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளன.
டெல்லி பெல்லி இந்திப் படம் தமிழில் சேட்டை பெயரில் ரீமேக் ஆகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

நீண்ட வருடங்களுக்கு பின்பு விக்ரமுடன் கைகோர்க்கும் சுரேஷ் கோபி

ஷங்கர் இயக்கும் ஐ படத்தில் நடிகர் விக்ரமுடன் மலையாள நடிகர் சுரேஷ் கோபி இணைந்துள்ளார்.
ஷங்கரின் ஐ, விறுவிறுவென சீனாவில் வளர்ந்து வருகிறது. சியான் விக்ரமுடன் ஷங்கரும் எமி ஜாக்சனும் இரண்டாவது முறையாக ஐ படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் மலையாள நடிகர் சுரேஷ் கோபியும் விக்ரமும் மலையாளப் படங்களில் 15 வருடங்களுக்கு முன்னர் இணைந்து நடித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி நடிக்கவிருந்த ஐ படத்தின் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் படமாக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஐ படத்தில் நடிகர் சுரேஷ் கோபி டொக்டராக நடிக்கிறாராம். இனி சுரேஷ் கோபி நடிக்கும் காட்சிகள் எடுக்க பல நாட்கள் ஆகும் என்பதால், சுரேஷ் கோபி தற்போது தமது தோற்றத்தில் முதுமை தெரியாமல் இருக்கவும் புத்துணர்ச்சி கிடைக்கவும் ஆயுர்வேதா சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறாராம்.
ஐ-ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்தமகன் ராம்குமார் நடிப்பதும், இயக்குனர் ஷங்கர் முதன்முறையாக ஒளிப்பதிவாளர் பிசி, ஸ்ரீராமுடன் கைகோர்த்து இருப்பதும் தெரிந்த விடயங்களே ஆகும்.

ரமணா இந்தி ரீமேக்கில் தமன்னா

தென்னிந்திய படங்களிலிருந்து சென்று தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை தமன்னா தமிழ் படத்தின் இந்தி ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளார்.
‘ஜெயம்', ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி', ‘உனக்கும் எனக்கும்' உள்ளிட்ட பல ரீமேக் படங்களை இயக்கியவர் ‘ஜெயம்' ராஜா.
இவர் 2002ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘ரமணா' படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
இதில் நாயகனாக அக்ஷய் குமார் நடிக்கவுள்ளார். நாயகியாக நடிகை தமன்னா நடிக்கிறார்.
இது குறித்து தமன்னாவின் தந்தை பாட்டியா கூறுகையில், ஆமாம், அக்ஷய் குமார் படத்தில் நடிப்பது பற்றி பேச்சு நடக்கிறது என்றும் இதை ஜெயம் ராஜா இயக்க உள்ளார் எனவும் கூறினார்.
ரவுடி ரத்தோர் (சிறுத்தை ரீமேக்) படத்தையடுத்து இப்படத்தை, பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார்.

துட்டு படத்தில் அறிமுகமாகும் டெல்லி மொடல் அழகி

கொலிவுட்டில் பார்வை ஒன்றே போதுமே உட்பட பல படங்களை இயக்கியவர் முரளி கிருஷ்ணா.
இவர் தற்போது, துட்டு என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்துக்காக, சோனா சாப்ரா என்ற டெல்லி மொடல் அழகியை, இவர் தமிழுக்கு இறக்குமதி செய்துள்ளார்.
இது குறித்து முரளி கிருஷ்ணா கூறுகையில், மொழியே தெரியாத போதும் காட்சியைப் பற்றி விளக்கியதும் அதை உள்வாங்கி அற்புதமாக நடித்தார் சோனா.
குறிப்பாக, பாடல் காட்சிகளில் இளைஞர்களின் ரசனைக்கு நல்ல தீனி போட்டுள்ளார்.
சோனா சாப்ராவின் இந்த அணுகுமுறையை அறிந்து தெலுங்கு, மலையாளத்தில் இருந்தும் பட வாய்ப்புகள் அவரைத்தேடி வர தொடங்கி உள்ளன.
அதனால், துட்டு படத்தின் ரிலீசுக்கு பின்பு, அவர் தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாகி விடுவார் எனவும் கூறியுள்ளார்.

தாண்டவம் – திரை விமர்சனம்


தெய்வத் திருமகள் என்ற சுட்ட ஹிட் படம் கொடுத்த இயக்குநர் விஜய்-விக்ரம்-அனுஷ்கா-சந்தானம் கூட்டணியில் வழக்கத்திற்கு மாறான பழி வாங்கும் கதை என்றும், எக்கோ கன்செப்ட்-எக்காத கான்செப்ட் என்றும் பலவாறு விளம்பரப்படுத்தப்பட்டு  இன்று வெளியாகியிருக்கும் படம் தாண்டவம்.
ஒரு ஊர்ல…………………:
கண் பார்வையற்ற, லண்டன் சர்ச்சில் நல்ல பிள்ளையாக பியானோ வாசிக்கும் ஹீரோ, திடீர் திடீர் என சிலரைக் கொல்கிறார். லண்டன் போலீஸில் வேலை செய்யும் நாசர் அதைத் துப்பறிகிறார்.  அந்தக் கொலைகள் ஏன், எதற்கு, எப்படி நடந்தது என்பதே கதை.
திரைக்கதை :
லண்டனில் மிஸ்.இங்கிலாந்து ஆக முயற்சிக்கும் எமி ஜாக்சன், கண் பார்வையற்ற விக்ரமை சந்திக்கிறார். ஒரு எறும்புக்குக் கூட தீங்கு விளைவிக்காத நல்லவரான விக்ரமை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் விக்ரம் அடிக்கடி எங்கோ போய், யாரையாவது கொலை செய்துவிட்டு, மறுநாள் காலையில் பியானோ வாசிப்பைத் தொடர்கிறார். ஒரு பக்கம் எமியின் காதல், மறுபக்கம் லண்டன் போலீஸின் தேடல் என்று போகும்போது, ஃப்ளாஷ்பேக்கில் விக்ரம் ஒரு இந்திய உளவுத்துறையின் முக்கிய அதிகாரி என்றும், அனுஷ்காவை மணந்த புதுமாப்பிள்ளை என்றும் தெரிகிறது. நாசர், கொலையாளி விக்ரம் தான் என்று கண்டுபிடிப்பதில் முதல்பாதி முடிகிறது.
மெதுவாக நகரும் முதல்பாதிக்கு நேரேதிராக இரண்டாம் பகுதியில் படம் ஃபுல் ஸ்பீடில் பறக்கிறது. இந்திய ராணுவம் தொலைத்த ஒரு விஷயத்தைத் தேடி விக்ரம் லண்டன் வர, அங்கே அவர் வாழ்க்கையே தலைகீழாய் ஆன கதையும், போலீஸீன் பிடியில் சிக்காமலேயே விக்ரம் வில்லன்களை பழி வாங்கும் கதையும் விறுவிறுப்பாக சொல்லப்படுகிறது.
கல்யாணம் ஆனபின்னும் முதலில் ஃப்ரெண்ட்ஸ் ஆகி, பிறகு லவ்வர் ஆகி, அதன்பிறகே மற்றதெல்லாம் எனும் மனைவின் கண்டிசன், எக்கோ கான்செப்ட், சந்தானத்தின் ஒன் லைனர்கள், அழகான லண்டன் மாநகரம், லண்டன் குண்டுவெடிப்பை கதையில் புகுத்திய சாமர்த்தியம் என பல விஷயங்கள் படத்தை ரசிக்க வைக்கின்றன.
விக்ரம் :
பிறவி நடிகனான விக்ரம், இதிலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நம்மை அசத்துகிறார். உளவுத்துறை அதிகாரிக்கும், கண் பார்வையற்றவருக்கும் பாடி லாங்குவேஜில் அவர் காட்டும் வித்தியாசங்கள் அருமை. உடலை கேரக்டருக்கு ஏற்றபடி அவர் மாற்றி இருந்தாலும், ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் முகத்தில் முதுமை தனித்துத் தெரிகிறது. நல்ல நடிகரான விக்ரம் முகத்தைக் கொஞ்சம் கவனிப்பது நல்லது.
ஹீரோயின்ஸ் :
முதல் பாதியில் எமி ஜாக்சன் தான் அதிகக் காட்சிகளில் வருகிறார். ஆங்கிலேயெ முகம் என்பதால், நமக்கு அவர்மேல் பெரிதாக ஈடுபாடு வரவில்லை. (உனக்கு ஏன்யா வரணும்ங்கிறீங்களா?..அதுவும் சரிதான்!). ஆனால் எமி நன்றாக நடிக்கவே செய்கிறார். வெள்ளைக்குதிரை லட்சுமி ராய் இந்தப் படத்தில் இருந்தாலும், நண்பனின் மனைவியாக வருவதால் குத்துப்பாட்டுக்கும் நோ சான்ஸ்..சோ நோ யூஸ்!
எல்லாவற்றுக்கும் சேர்த்து, ஃப்ளாஷ்பேக்கில் அனுஷ்கா வருகிறார். அறிமுகக் காட்சியிலேயே மழையில் நனைந்த அனுஷ்காவைக் காட்டுபோது தியெட்டரே அதிர்கிறது.(உண்மையைச் சொல்லு..தியேட்டரா அதிர்ந்துச்சு?). சிநேகாவும் வாலண்டரி ரிட்டயர்மெண்ட்டில் போய்விட்ட நிலையில், குடும்பப் பாங்கான கேரக்டருக்கு அனுஷ்காவை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?..விக்ரமை போலீஸ் எஸ்.ஐ என்று நினைத்துகொண்டு, அவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கும் காமெடி என்றாலும், லாஜிக் மிஸ்ஸிங்.
சந்தானம் :
டாக்ஸி டிரைவரான சந்தானம், விக்ரம் கொலை செய்யப்போகும்போதெல்லாம் சரியாக வந்து மாட்டிக்கொள்வது நல்ல காமெடி. தெய்வத் திருமகளை அடுத்து இணையும் கூட்டணி என்பதால், சந்தானத்திடம் அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் வரும் காட்சிகளே குறைவு தான் என்பதால், அவர் என்ன செய்வார்? ஆனாலும் கிடைக்கிற கேப்பில் சிக்ஸராக அடித்துத் தள்ளுகிறார். நாசரிடம் எகத்தாளமாகப் பேசுவதும் ரவுசு.
நாசர் / ஜெகபதிபாபு:
முகமூடியில் நரேன் – ஜீவாவை விரட்டிய நாசர், இதில் விக்ரமை விரட்டுகிறார். ஆனாலும் ஈழத்தமிழராக வருவதால், இரு கேரக்டர்களும் ஒன்றாகத் தெரியவில்லை. இந்தப் படத்தில் அவருக்கு மகள் இல்லை என்பதும் ஒரு ஆறுதல். விக்ரமின் உயிருக்குயிரான நண்பனாக ஜெகபதிபாபு வருகிறார். நல்ல நடிப்பு.
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- இடைவேளை வரை மெதுவாகச் செல்லும் திரைக்கதை
- கஜினியில் மெமரி லாஸ், இங்கே பார்வை லாஸ்!..ஹீரோயினும் லாஸ் என சில ஒற்றுமைகள்
-  பாடல்கள்..ஜி.வி.பிரகாஷ் ஏமாற்றிவிட்டார்
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- நல்ல கதையுடன், குடும்பத்துடம் பார்க்கக்கூடிய படமாக எடுத்தது
- விக்ரமின் கவனமான நடிப்பு
- ஹி..ஹி..அனுஷ்கா, அப்புறம்  சந்தானம்
- நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு
- கண் தெரியாவிட்டாலும், நம்பகமான சண்டைக்காட்சிகள்
அப்புறம்….:
- எக்கோ கான்செப்ட் போன்ற பல புதிய விஷயங்கள் இருந்தாலும், படக்குழு எல்லா டிவி பேட்டிகளில் அதையே திரும்பத் திரும்பச் சொல்லி பழைய விஷயமாக்கியது. இவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது.
பார்க்கலாமா? :
-  கண்டிப்பாக பார்க்கலாம்.
- (இது எந்தெந்த படத்துல இருந்தெல்லாம் சுட்டுறுப்பாங்கன்னு ஆராய்ச்சி செய்யாம, படம் பார்க்கிற சராசரி ரசிகனா நீங்க இருந்தா..ரசிக்கலாம்!)

இந்திக்கும் போகிறது ‘ஐ’?

தனது ஐ படத்தை பாலிவுட்டிலும் ரிலீஸ் பண்ணத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர். ஆனால் வழக்கம்போல டப்பிங் படமாக அல்ல… ரீமேக் ஆக!


ஆனால் இந்திப் பதிப்பில் நடிக்கப்போவது விக்ரம் அல்ல. மகேஷ் பாபுவிடம் பேசிக் கொண்டிருக்கிறாராம் ஷங்கர்.

ஷங்கர் இதுவரை உருவாக்கிய அனைத்துப் படங்களுமே இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன. முதல்வன் மட்டும் நாயக் என்ற பெயரில் ரீமேக் ஆகி தோல்வியடைந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கர் உருவாக்கிய சிவாஜி, எந்திரன் இரண்டுமே பாலிவுட்டை கலக்கின.
இப்போது விக்ரம் – எமி ஜாக்ஸன் நடிக்கும் ஐ படத்தை பிரமாண்டமான ரொமான்டிக் த்ரில்லராக உருவாக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு இந்தியிலும் ஏக விசாரிப்புகள் தொடர்வதாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளாராம் ஷங்கர்.
மகேஷ் பாபு- எமி ஜாக்ஸனை வைத்து இந்தப் படத்தை செய்யப் போகிறார் ஷங்கர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஷங்கரின் அலுவலகத்தில் தொடர்பு கொண்டபோது, “இது வெறும் வதந்திதான் என்றனர். ஷங்கருக்கு அப்படி எந்தத் திட்டமும் இல்லை. அப்படியே ஐயை இந்தியில் வெளியிட்டாலும், அதை டப் செய்வாரே தவிர, நேரடியாக ரீமேக் செய்யமாட்டார்,” என்றனர்

கிழட்டு நடிகருக்கு கவர்ச்சி நடிகை கேட்குதோ?


 

காலம் போன காலத்துல இந்தாளுக்கு தேவையாய்யா இது என்று சினிமாக்காரர்கள் தலையிலடித்துக் கொண்ட ஒரு மேட்டர் இது.
தமிழ் சினிமாவில் பஞ்சாயத்து நடிகர் என்றாலே இவரைத்தான் அடையாளம் காட்டுவார்கள். இவரது குடும்ப விவகாரத்தை மகளே சந்தி சிரிக்குமளவுக்கு போட்டுடைத்தது நினைவிருக்கலாம். பார்ட்டிக்குப் பேர் போன இந்த பஞ்சாயத்துப் பார்ட்டி, ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
படத்துக்குப் பெயர் ‘… ஊஞ்சலாடுகிறது’.

தலைப்புக்கு ஏற்ற மாதிரி பேரன் பேத்தியெல்லாம் பார்த்து கொள்ளுப் பேத்திக்கு காத்திருக்கும் நடிகரின் வாலிபம் ஊஞ்சலாட ஆரம்பித்திருக்கிறது.
இந்தப் படத்தில் நாயகியாக நடிப்பவர் தொப்பையழகி என்று செல்லமாக சொல்லப்படும் வடக்கத்திய நடிகை. 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு ரவுண்ட் வந்து ஓய்ந்து, சமீபத்தில்தான் மகாபாரத வில்லன் பெயரில் வந்த படத்தில் கீப் வேடத்தில் தோன்றியிருந்தார்.

படப்பிடிப்புத் தளத்தில் ஷாட் முடிந்த கேப்பில், நடிகை ஓய்வாக ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, நடிகர் பக்கத்தில் போய் உட்கார்ந்திருக்கிறார்.
மெதுவாக நாயகியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அவரிடம் சில்மிஷத்தை ஆரம்பித்துள்ளார் நடிகர். நடிகையோ அதை ஒரு மேட்டராகவே நினைக்கவில்லையாம். நடிகரோ நேரம் ஆக ஆக வேகமாக வேலை பார்க்கத் தொடங்கிவிட்டாராம். நடிகைக்கு கொஞ்ச நேரத்தில் சிரிப்பு வந்துவிட்டதாம். நான் பார்க்காத விளையாட்டா என்ற தோரணையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, மூச்சு வாங்கியபடி நடிகர் விளையாட, சிரிப்பாய் சிரித்துப் போனதாம் செட்டில்!!

 
-