>

நடுரோட்டில் திட்டு வாங்கிய ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயாவின் கார் நடுரோட்டில் பஞ்சாராகி நிற்க, பின் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்களிடம் திட்டு வாங்கி திரும்பியிருக்கிறார்.
ஸ்ரேயா இளவரசி வேடத்தில் நடிக்கும் சந்திரா திரைப்படம் மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தற்சமயம் ஸ்ரேயா மும்பையிலேயே தங்கியுள்ளார்.
இந்நிலையில் தனது தோழிகளை அழைத்து வருவதற்காக நடிகை ஸ்ரேயா விமானநிலையம் சென்று திரும்பியிருக்கிறார்.
வரும் வழியில் ஸ்ரேயாவின் கார் பஞ்சரானது. இதனால் அவர் காரின் முன் பின் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பொதுமக்களில் சிலர் ஆட்டோகிராப் வாங்கினர். மற்றவர்கள் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான ஸ்ரேயாவை திட்டி தீர்த்தனர்.
இதனால் ஸ்ரேயா, தனது தந்தைக்கு போன் செய்தார். அவர் பொலிஸார் மூலம் ஸ்ரேயாவை மீட்டனர்.
தன் வாழ்க்கையில் நடந்த மிக மோசமான சம்பவம் என ஸ்ரேயா தெரிவித்தார்.

 
-