>

நீண்ட வருடங்களுக்கு பின்பு விக்ரமுடன் கைகோர்க்கும் சுரேஷ் கோபி

ஷங்கர் இயக்கும் ஐ படத்தில் நடிகர் விக்ரமுடன் மலையாள நடிகர் சுரேஷ் கோபி இணைந்துள்ளார்.
ஷங்கரின் ஐ, விறுவிறுவென சீனாவில் வளர்ந்து வருகிறது. சியான் விக்ரமுடன் ஷங்கரும் எமி ஜாக்சனும் இரண்டாவது முறையாக ஐ படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் மலையாள நடிகர் சுரேஷ் கோபியும் விக்ரமும் மலையாளப் படங்களில் 15 வருடங்களுக்கு முன்னர் இணைந்து நடித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி நடிக்கவிருந்த ஐ படத்தின் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் படமாக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஐ படத்தில் நடிகர் சுரேஷ் கோபி டொக்டராக நடிக்கிறாராம். இனி சுரேஷ் கோபி நடிக்கும் காட்சிகள் எடுக்க பல நாட்கள் ஆகும் என்பதால், சுரேஷ் கோபி தற்போது தமது தோற்றத்தில் முதுமை தெரியாமல் இருக்கவும் புத்துணர்ச்சி கிடைக்கவும் ஆயுர்வேதா சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறாராம்.
ஐ-ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்தமகன் ராம்குமார் நடிப்பதும், இயக்குனர் ஷங்கர் முதன்முறையாக ஒளிப்பதிவாளர் பிசி, ஸ்ரீராமுடன் கைகோர்த்து இருப்பதும் தெரிந்த விடயங்களே ஆகும்.

 
-