>

பாம்புகளைத் திருடி காற்சட்டைக்குள் பதுக்கிய நபர் நெருக்கடியில்-Video


 

அமெரிக்காவில் கடையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த 5 பாம்புகளை திருடி, அவற்றை தான் அணிந்திருந்த காற்சட்டைக்குள் மறைத்துக் கொண்டு சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


அரிஸோனா மாநிலத்திலுள்ள மேசா எனும் நகரிலுள்ள கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 பாம்புகளை, எரிக் பீகல் எனும் 22 வயது இளைஞர் திருடி, தனது காற்சட்டைக்குள் மறைக்கும் காட்சி அக்கடையிலிருந்த கமராவில் பதிவாகியுள்ளது.



குறித்த இளைஞர் கடையை விட்டுவெளியேறுவதற்கு முன் ஒரு மணித்தியாலம் அக்கடைக்குள் சுற்றி திரிந்து குறித்த பாம்புகளை தனது காற்சட்டைக்குள் திணித்தார் என கடையின் உரியமையாளரான கிறிஸ்டியன் கலேட்டா என்பவர் தெரிவித்துள்ளார்.

அந்த இளைஞர் திருடிய பாம்புகளில் ஒன்று மிக அரிய வகைப் பாம்பு எனவும் அது சுமார் 1000 டொலர் பெறுமதியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பீகல் குறித்த பாம்புகளை மற்றுமொரு செல்லப்பிராணி விற்பனைக் கடையொன்றுக்கு கொண்டு சென்றிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 
-