இவர் தற்போது, துட்டு என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்துக்காக, சோனா சாப்ரா என்ற டெல்லி மொடல் அழகியை, இவர் தமிழுக்கு இறக்குமதி செய்துள்ளார்.
இது குறித்து முரளி கிருஷ்ணா கூறுகையில், மொழியே தெரியாத போதும் காட்சியைப் பற்றி விளக்கியதும் அதை உள்வாங்கி அற்புதமாக நடித்தார் சோனா.
குறிப்பாக, பாடல் காட்சிகளில் இளைஞர்களின் ரசனைக்கு நல்ல தீனி போட்டுள்ளார்.
சோனா சாப்ராவின் இந்த அணுகுமுறையை அறிந்து தெலுங்கு, மலையாளத்தில் இருந்தும் பட வாய்ப்புகள் அவரைத்தேடி வர தொடங்கி உள்ளன.
அதனால், துட்டு படத்தின் ரிலீசுக்கு பின்பு, அவர் தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாகி விடுவார் எனவும் கூறியுள்ளார். |