அதனால் தான் ஏறும் மேடையில் எல்லாம் துப்பாக்கி சீக்கிரம் வெடிக்கும் என்று கூறி வந்தவரை நீதிமன்றம் மறுபடியும் சிந்திக்க வைத்து விட்டது. அதாவது மறுபடியும் வழக்கை செப்டம்பர் மாதம் தள்ளி வைத்து விட்டது. அடுத்த முறையும் தீர்ப்பு கிடைக்குமா என்றால் சந்தேகமே. இதனால் விரக்தியான விஜய் வேறு தலைப்பை தேடும்படி உத்தரவிட்டிருக்கிறார். இப்பொழுது படக் குழுவினர் அனைவரும் துப்பாக்கி போல இன்னுமொரு மாஸான தலைப்பை தேடி வருகிறார்கள். இருந்தாலும் செப்டம்பர் மாதம் வழக்கையும் சந்திக்க தயாராகத் தான் இருக்கிறார்கள்.