
வீரர்களுக்கு சம்பளம் வழங்குவது உட்பட
நிதி குளறுபடிகளை சரி செய்யாவிட்டால், டெக்கான் சார்ஜர்ஸ் ஒப்பந்தத்தை
ரத்து செய்ய தயங்க மாட்டோம்,'' என, பி.சி.சி.ஐ., எச்சரித்துள்ளது.
முதன்
முதலாக நடந்த ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில், 8 அணிகள் பங்கேற்றன.
பின், இந்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. இதில், கொச்சி அணியின் நிர்வாக
குளறுபடியால், இதன் ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,)
ரத்து செய்தது.
இப்போது
டெக்கான் சார்ஜர்ஸ் அணியிலும் நிதி குளறுபடி ஏற்பட்டுள்ளது. இந்நிறுவனம்
கடனில் தள்ளாடுகிறது. இதனால், வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம்
இன்னும் தரப்படவில்லை. இதை சரிசெய்ய, இம்மாத இறுதி வரை, கால அவகாசம்
கேட்டிருந்தனர்.
இதுகுறித்து ஐ.பி.எல்., கட்டுப்பாட்டுக்குழு விவாதித்தது. தவிர, பி.சி.சி.ஐ., செயற்குழுவிலும் இப்பிரச்னை விவாதிக்கப்பட்டது.
இதன்
முடிவில், "குறிப்பிட்ட காலத்துக்குள், டெக்கான் அணி நிர்வாகம் நிதி
குளறுபடியை சரிசெய்யவில்லை எனில், அணியின் ஒப்பந்தத்தை பி.சி.சி.ஐ., ரத்து
செய்ய தயங்காது.
மீண்டும் புதிய அணியை சேர்க்க, ஏலம் நடத்த வேண்டிய நிலை வரலாம்,' என, தெரிவித்தது.